குறைவான விலையில் அதிக துணிகள்.. இரு தரப்பினரிடையே தகராறு - பழைய வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு

x

சென்னை பழைய வண்ணாரைப்பேட்டையில் மொத்தமாகவும், சில்லரை வியாபராமாகவும் ஏகப்பட்ட துணிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, சமூக வலைதளங்களில் காண்பது போல குறைவான விலைக்கு அதிக துணிகள் வழங்குவதாக கூறி அருகருகே உள்ள இரு கடைகளுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், இரு தரப்பினருக்கு இடையேயான தகராறில், மது போதையில் கடையில் இருந்து துணிகளை எடுத்து சென்றும், மாமூல் கேட்டு தாக்கியதாகவும் கூறி ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபவட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்