மக்களே உஷார்... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

x

வேலூர் மாவட்டம் மோர்தானா அணையில் உபரிநீர் வெளியேற்றப்படும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் அருகே தமிழக ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ள, 261 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட, மோர்தானா அணை முழுவதுமாக நிரம்பி உள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், குடியாத்தம் நகராட்சி சார்பில், கரையோர பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்