வீட்டில் யானை தந்தங்கள் வைத்திருந்த வழக்கு... மோகன்லாலுக்கு முற்றும் நெருக்கடி... நீதிமன்றம் அதிரடி

x
  • நடிகர் மோகன்லால் வீட்டில் யானை தந்தம் வைத்திருந்த விவகாரத்தில், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து நடிகர் மோகன்லால் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
  • 2012ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் வீட்டில் இருந்து, 4 யானை தந்தங்களை வருமான வரித்துறை கைப்பற்றியது.
  • இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கை ரத்து செய்ய கேரள அரசு தீர்மானித்து பெரும்பாவூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த‌து.
  • ஆனால், தங்களது வாதங்களையும் கேட்க வேண்டும் என 2 பேர் உயர் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்றதால், அரசின் மனுவை பெரும்பாவூர் நீதிமன்றம் ரத்து செய்த‌து.
  • இதை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் மோகன்லால் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஏ.பதுருதீன் அமர்வு, நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகாரம் இல்லை என தெளிவு படுத்தியுள்ளது.
  • அரசு தாக்கல் செய்த மனுவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், சட்டம் அனைவருக்கும் பொறுந்தும் என்று கடுமையான விமர்சனங்களை வைத்ததோடு, மோகன்லால் மனுவை தள்ளுபடி செய்த‌து.

Next Story

மேலும் செய்திகள்