"அடுத்த 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

x

குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை முதல் வருகிற 30ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்