பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய கும்பல்.. வாகனங்களை அடித்து நொறுக்கி அராஜகம்..சென்னையில் பரபரப்பு

x

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய கும்பல்.. வாகனங்களை அடித்து நொறுக்கி அராஜகம்.. அலறியடித்து ஓடிய மக்கள்-சென்னையில் பரபரப்பு

சென்னை ஆலந்தூரில், பெட்ரோல் வெடிகுண்டு, கத்தி, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்த 19 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில், 20 பேர் கொண்ட கும்பல் கையில் பெட்ரோல் வெடிகுண்டு, கத்தி, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று, அங்கிருந்து ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். அப்போது தெருவில் நின்று கொண்டிருந்த நவீன், ஷபீக், அபுபக்கர் ஆகிய மூன்று பேரை தலையில் தாக்கியதுடன், பிடிக்க வந்த ரோந்து போலீசார் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு நாகூர் மீரான் என்ற ரடிவுயை, ராபின்சன் தலைமையிலான ரவுடி கும்பல் கொலை செய்தது. ராபின்சனை கொலை செய்ய நாகூர் மீரான் தரப்பு சுற்றிக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், ராபின்சன் தங்கை ஷெரினின் நண்பரான அணில் என்பவரை, 2 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. இந்த சம்பவம் ராபின்சனுக்கு தெரியவரவே, அவரது தலைமையிலான ரவுடி கும்பல் இந்த கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய கும்பலில் 19 பேரை போலீசார் கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்