சென்னையில் ஒரு மணி நேரத்தில் 6 பேரிடம் செல்போன் பறிப்பு... எல்லா இடங்களிலும் ஒரே கொள்ளையர்கள் கைவரிசை

x

சென்னையில் நடந்து செல்வோர் கைகளில் வைத்திருந்த செல்போன்களை 2 சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் லாவகமாக பறித்து சென்றுள்ளனர்.

கே.கே நகர் சிவன் பார்க் அருகே சென்று கொண்டு இருந்த பிரசாந்த் ராஜ் என்பவரின் செல்போனை 2 சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்க சாஸ்திரி, ரேகா மற்றும் அசோக் நகர் மகாதேவன் தெருவை சேர்ந்த ஒரு இளைஞர் உள்ளிட்டோரிடமும் செல்போன் பறிக்கப்பட்டது.

அதேபோல் மாம்பலம் அருகே சென்று கொண்டு இருந்த இருவரிடம் இருந்த செல்போன்களையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அனைத்து செல்போன் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர்கள் என தெரிவித்தனர்.

1 மணி நேரத்தில் தொடர்ந்து 6 பேரிடம் செல்போன்கள் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தியாகராய நகர் காவல் மாவட்ட துணை ஆணையர் தலைமையிலான 3 உதவியாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்