மொபைல் சார்ஜர் வெடித்து சிதைந்த வீடு : சார்ஜ் செய்த பின் இந்த தப்ப பண்ணிடாதீங்க - வார்னிங் கொடுக்கும் கோர சம்பவம்

x

கேரளாவில் மொபைல் சார்ஜர் வெடித்ததில் வீடு முழுவதும் தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மசூத் என்பவரின் வீட்டினுள் திடீரென தீப்பற்றி அதிகப்படியான புகை வெளியேறியதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செல்போன் சார்ஜ் செய்த பிறகு பிளக்கை அணைக்காமல் விட்டதால் வெப்பத்தின் காரணமாக சார்ஜர் வெடித்து வீடு முழுவதும் தீ பரவியது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்