எம்எல்ஏ வெற்றியை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • கேரள மாநிலம், தேவிகுளம் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ. ராஜாவின் வெற்றியை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2021 சட்டமன்ற தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் சிபிஎம் சார்பில் வெற்றி பெற்ற ஏ.ராஜா பொய்யான ஜாதிச் சான்றிதழ் சமர்ப்பித்து தேர்தலில் போட்டியிட்டதாக யு.டி.எஃப் வேட்பாளர் குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
  • அதில், பட்டியலின இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதை மறைத்து பொய்யான சான்றிதழ் சமர்ப்பித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், தேவிகுளம் தேர்தல் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, பட்டியல் இன இடஒதுக்கீட்டிற்கு ராஜா தகுதியற்றவர் எனவும் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்