மூதாட்டியை கொன்று 45 வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானையை பிடிக்க கோரி பொதுமக்கள்,எம்.எல்.ஏ போராட்டம்

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் மூதாட்டியை கொன்று 45க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானையை பிடிக்க கோரி தேவாலா பஜார் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜெய்சீலன் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து காட்டு யானையை பிடிக்க அனுமதி வழங்கி வனத்துறை சார்பில் தலைமை வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டார்.

காட்டு யானையை பிடிக்கும் பணி தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்