காணாமல் போன 77 வயது மூதாட்டியை 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்-மூதாட்டி வளையல்களில் SI-ஐ செய்த செயல்

x

காணாமல் போன 77 வயது மூதாட்டியை இரண்டு மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்து சென்னை காவல்துறை அசத்தியுள்ளது.சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 77 வயது மூதாட்டியை என காணவில்லை என, சென்னை போலீசாருக்கு புகார் வந்துள்ளது.

வயது மூப்பின் காரணமாக ஞாபக மறதி குறைபாடு உள்ள அவரை கண்டுபிடித்து தருமாறு இரவு 8.30 மணி அளவில் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக களம் இறங்கிய சென்னை போலீஸ், அனைத்து காவல் நிலைய whatsapp குரூப்பில் இந்த புகாரை பதிவிட்டது

. இந்த நிலையில், தண்டையார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரியை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர் ஒருவர் கண்டுபிடித்தார்.

பின்னர் இரவு 10. 30 மணி அளவில் மூதாட்டி ராஜேஸ்வரி குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ராஜேஸ்வரியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் பிரகாஷ், 2 வளையல்களில் ராஜேஸ்வரியின் குடும்பத்தினரின் தொலைபேசி எண்களை பொறித்து அதனை அவருக்கு அணிவித்துள்ளார்.

வயதானவர்கள் காணாமல் போகும் பட்சத்தில் இதன் மூலமாக எளிதாக அவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கலாம் எனவும் உதவி ஆய்வாளர் பிரகாஷ் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்