"காணாமல் போன காதல் மனைவி".. "இளங்காத்து வீசுதே.. இசை போல பேசுதே"..

x

விருத்தாச்சலத்தில் காணாமல் போன காதல் மனைவியைக் கண்டுபிடித்துத் தரக்கோரி காவல் நிலையம் முன்பு போதையில் மைக்செட் போட்டு பாடல் பாடிய பாடகரால் பரபரப்பு ஏற்பட்டது... கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் இந்த பழனிவேல்... இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்ததாக பழனிவேல் கூறுகிறார்... தான் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாரித்து வரும் நிலையில், தனது காதல் மனைவியை 5 ஆண்டுகளாகக் காணைவில்லை என்றும், அவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் காவல் நிலையத்தில் காலை புகாரளிக்க வந்தார்... அதிகாரிகள் இல்லாததால் 10 மணிக்கு மேல் வருமாறு காவலர்கள் கூறவே, திடீரென பாடகர் பழனிவேல், காவல் நிலையத்தின் வெளியில் நின்று, தன் மனைவியை நினைத்து இளங்காற்று வீசுதே என்ற பிதாமகன் பட பாடலைப் பாடத் துவங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்