"தவறான தகவலை பரப்புவோருக்கு பாடம் புகட்ட வேண்டும்" - ட்விட்டர் ஸ்பேசஸில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

x

புதிதாக உலகைப் பார்க்கும் இளைஞர்கள் மத்தியில் தவறான தகவலை பரப்புவோருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி கொண்டாடி வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், ட்விட்டர் ஸ்பேசஸ் மூலம் உரையாற்றினார். அப்போது திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல; அறிவு இயக்கமாகவும் செயல்படுகிறது என்றார். புதிதாக உலகை பார்க்கும் இளைஞர்களுக்கு தவறான தகவல் பரப்பப்படுகிறது என்றும், உணர்ச்சி வசத்தில் பேசப்பட்ட வார்த்தைகளை வைத்து விளையாடும் தப்பு கணக்குகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆட்சியைப் பற்றி குறை சொல்ல முடியாதவர்கள் திராவிடம் என்பதை விமர்சிக்கிறார்கள் என்றும், நமது எதிரிகள் மதவாத, சாதியவாத சக்திகளாக இருப்பதால், நாமே புதிய பிரச்னைகளை உருவாக்க கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்