"62 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் நடந்த அதிசயம்"

x

62 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி, மும்பையில் ஒரே நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. டெல்லியில், திட்டமிட்ட தேதிக்கு 2 நாட்கள் முன்பாகவும், மும்பையில் 2 வாரங்கள் தாமதமாகவும் பருவமழை தொடங்கியுள்ளது. 1961-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி, இதேபோன்று இரு நகரங்களிலும் ஒரே நாளில் பருவமழை தொடங்கியது. 62 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்த அதிசயம் மீண்டும் நிகழ்ந்துள்ளது என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் மூத்த விஞ்ஞானி டி.எஸ்.பாய் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்