கட்டுமான பணிகளை அமைச்சர் திடீர் ஆய்வு - அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு | Minister EV Velu

x

கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டுமான பணிகள் குறித்து, அமைச்சர் எ. வ. வேலு திடீர் ஆய்வில் ஈடுபட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு, திடீரென ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், குறித்த காலத்தில் பணிகளை முடிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்