ஏரியில் அமைச்சர்கள் படகு சவாரி.. "ரிலாக்ஸ்" டைமில் கூட சீரியஸ் விவாதம்

x

கொடைக்கானல் ஏரியில் அமைச்சர்கள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்... கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கு வருகை புரிந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரப்பாணி, பழனி எம்.எல்.ஏ செந்தில் குமார், வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன் ஆகியோர் மன்னவனூர் கிராமத்தில் சாகச சுற்றுலா தலம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து எழும்பள்ளம் ஏரியில் பரிசல் சவாரி செய்தனர். ரிலாக்சாக சவாரி செய்ய வேண்டிய நேரத்தில் கூட பழனி எம்.எல்.ஏ செந்தில் குமார், தொகுதி பிரச்சினைகள், தேவைகள் குறித்து அமைச்சர்களுடன் படகில் அமர்ந்தபடி கலந்துரையாடி வந்தார்.


Next Story

மேலும் செய்திகள்