அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக தாத்தாவின் திருக்குவளை இல்லத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி

x

தனது தாத்தாவும் மறைந்த முதல்வருமான கருணாநிதியின் நாகை திருக்குவளை இல்லத்திற்கு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருக்குவளை இல்லம் வந்த அமைச்சர் உதயநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாய் தந்தையரான அஞ்சுகம் முத்துவேல், மற்றும் மறைந்த முரசொலி மாறன், கருணாநிதி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கருணாநிதி இல்ல நினைவகத்தில் குறிப்பெழுதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் வழியில் மக்கள் பணி ஆற்றுவோம் என குறிப்பிட்டார்...


Next Story

மேலும் செய்திகள்