பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி..! | Udhayanidhi Stalin

x

நாமக்கல்லில் உள்ள அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தி மகிழ்ந்தார்... அழகுநகரில் உள்ள நகரவை துவக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட நடைமுறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உட்கொண்ட அவர், உணவின் தரம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்... இந்த ஆய்வின் போது அமைச்சர் மதிவேந்தன், எம்.பி ராஜேஷ்குமார், ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆகியோரும் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்