முதல்வர் விளையாட்டு போட்டி - கோப்பையை அறிமுகம் செய்தார் அமைச்சர் உதயநிதி

x

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் சார்பில் முதல் அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் வரும் 25ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகின்றன. மாநிலம் முழுவதும் இருந்து 27 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடக்க விழா கோலகலமாக நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் போட்டிகளை தொடங்கி வைத்து, கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் இருந்து நம்பர் ஒன் வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதே இலக்கு என சூளுரைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்