எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் சவால்..

x

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை தமிழகத்தில் எந்த ஊராக இருந்தாலும் அரசு பேருந்தில் அழைத்து செல்ல தயார் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக போக்குவரத்துறையின் செயல்பாடுகள் குறித்தும், பேருந்துகளின் எண்ணிக்கை குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு, அரியலூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கர், இந்தியாவிலேயே அதிக அளவில் அரசு பேருந்துகள் இயங்கும் மாநிலம் தமிழ்நாடு எனவும், எடப்பாடி பழனிச்சாமியை தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் அரசு பேருந்தில் அழைத்து செல்ல தயார் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்