"எங்க கை பூ பறிச்சிட்டு இருக்குமா?" - சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

x

பேனா நினைவு சின்னத்தை உடைப்பேன் என சீமான் கூறியிருந்த‌த‌ற்கு, எங்கள் கை பூ பறிக்குமா என அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

மெரினா கடற்கரை அருகே கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னத்தை உடைப்பேன் என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, எங்கள் கை பூ பறிச்சிக்கிட்டு இருக்குமா? என்றார்.

மேலும், சீமானுக்கு இந்த பதிலே போதும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்