மிதிவண்டிகளை வழங்கிய பின் உருக்கமாக பேசிய அமைச்சர் சாமிநாதன்

x

மாணவ, மாணவிகள் மனதை தைரியப்படுத்தி, எதிர்காலத்தை சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் சாமிநாதன் விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.

தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், மதிப்பெண் குறைந்துவிட்டாலோ, தேர்ச்சியில் இடர்பாடுகள் ஏற்பட்டாலோ உடனே மன தளர கூடாது என அறிவுறுத்தினர். மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அதிலிருந்து தேர்ச்சி செய்ய முயற்சி எடுங்கள் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்