நீலகிரி வெள்ள பாதிப்பு... | "அனைத்து துறைகளும் தயார்..." | அமைச்சர் ராமச்சந்திரன்

x

நீலகிரி மாவட்டம் கூடலூரில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில், வரலாறு காணாத கனமழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மசினகுடி செல்லும் தரப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் ராமச்சந்திரன், முகாம்களில் தங்கியுள்ள பழங்குடியினர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்