ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர்

x

ஒடிசாவில் ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளிடம் தமிழக அமைச்சர்கள் நலம் விசாரித்தனர். ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலசோர் பக்கீர் மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளிடம், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் அடங்கிய தமிழக குழுவினர் நலம் விசாரித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவர்களிடம் வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்