சாலையில் வலியால் துடிதுடித்த பசுமாடு... பதறியடித்து உதவி செய்த அமைச்சர் நாசர்

x

சாலையில் வலியால் துடித்துக் கொண்டிருந்த பசுமாட்டைப் பால் வளத்துறை அமைச்சர் நாசர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் நாசர் திருமுல்லைவாயல் வழியாக சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் பசுமாடு ஒன்று வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு பதறிப்போன அவர், உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கிச் சென்று பசுவிற்குத் தேவையான சிகிச்சை வழங்க ஏற்பாடுகளைத் துரிதமாக மேற்கொண்டார். உடனடியாக அந்த மாடு ஆவடியில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பால் தரும் பசுமாட்டின் உயிர் காத்த பால்வளத் துறை அமைச்சர் நாசருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்