"ஆவினில் பால் கொள்முதல் அளவு" - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

x

கல்வி மூலம் அனைத்து வாய்ப்புகளையும் பெற்று உயர்ந்திருக்கிறோம் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். சென்னை கிண்டியில் நடைபெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முதலமைச்சர் ஸ்டாலின் அமல்படுத்தி உள்ள 'நான் முதல்வன்' உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழ்நாட்டில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் அள‌வு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்