"ராஜினாமா பண்ணுங்க.. எம்எல்ஏவா ஜெயிக்க வைக்கிறோம்" - ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் அழைப்பு

x

ஆளுநர் பதவியை ராஜினாம ா செய்துவிட்டு எம்எல்ஏவாக பேரவைக்கு வந்து விவாதிக்கட்டும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். நெல்லையில் நடைபெற்ற திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு கூறினார். போட்டியிட்டால், தாங்களே வெற்றி பெற வைத்து எம்எல்ஏவாக சட்டபேரவைக்கு அனுப்பி வைப்பதாக கூறினார். சட்டப்பேரவையில் வைத்து விவாதிக்கட்டும் என்றும், இல்லையேல் பாஜகவில் சேர்ந்தால் அமைச்சர் ஆக்குவார்கள் என்றும் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்