"காயமடைந்தவரை என் காரில் ஏற்றுங்க.." ஆடி அசைந்து லேட்டா வந்த ஆம்புலன்ஸ்.. டென்ஷன் ஆன அமைச்சர் சந்திர பிரியங்கா ..பரபரப்பான சம்பவம்

x

காரைக்கால் அருகே விபத்தில் காயமடைந்தவரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததால், அதனை "நாளை வரவேண்டியது தானே" என அமைச்சர் கடிந்து கொண்டார். நெடுங்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், விபத்துக்குள்ளாகி காயமடைந்தார். அவ்வழியாக வந்த அமைச்சர் சந்திர பிரியங்கா, விபத்து குறித்து விசாரித்து அந்நபரை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லக் கூறினார். அப்போது, ஆம்புலன்ஸ் வந்த போது அதனை நாளை வர வேண்டியது தான எனக் கடிந்து கொண்டார். இச்சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்