கீழடி அருங்காட்சியகத்தில் மினி திரையரங்கமா!... எப்போது திறக்கப்படும்?...

x

சிவகங்கை மாவட்டம், கீழடி எட்டு கட்ட அகழ்வாய்வு பணிகளும், அதைச் சுற்றியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளில் 3 கட்ட பணிகளும் முடிவடைந்துள்ளது.

இதுவரை இந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருள்களை காட்சிப்படுத்துவதற்காக கொந்தகை கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 11.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அதன் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு கீழடி குறித்த தகவல்களை திரையிடும் வகையில், 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து காணும் விதமாக மினி திரையரங்கம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன் பணிகள் முழுவதும் ஓரிரு வாரங்களில் முடிவடையும் எனக் கூறப்படும் நிலையில், இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்