மினி பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது பயங்கரம்

x

உளுந்தூர்பேட்டை அருகே மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று வந்த மினி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மினி பேருந்தில் மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பினர். பரிக்கல் கிராமம் அருகே வந்த போது, லாரி ஒன்று மொதுவது போல் வந்த‌தால், பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்