ரூபாய் நோட்டில் மைக்ரோ சிப்? - மத்திய அரசு பதில் | Currency | Micro Chip |

x

உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களில், மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ரூபாய் நோட்டுகளில் மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் எதுவும் உள்ளதா என மக்களவை உறுப்பினர்கள் அண்ணாதுரை, தனுஷ் குமார், மனிஷ் திவாரி உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளில் மைக்ரோ சிப் பொருத்தம் திட்டம் எதுவும் இல்லை என் தெரிவித்துள்ளார். மேலும் ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் பரிந்துரைகளை பரிசீலித்த பின்னர் ரூபாய் நோட்டுகளின் வடிவம் போன்றவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்