எதிர்க்கட்சி தலைவர்களின் மெகா கூட்டம்...இன்று பீகார் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

x

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நாளை அம்மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனகார்கே, முன்னாள் தலைவர் ராகுலகாந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று பீகார் புறப்படுகின்றனர். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், மக்களவை தேர்தலில் பாஜகவை எப்படி எதிர்கொள்வது, ஒருங்கிணைந்த தேர்தல் செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவது, முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொள்வது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்