மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா - பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்

x

மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி, நாள்தோறும் அம்மனும், சுவாமியும் மாசி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். அப்போது, பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக, தெற்குவாசல் பகுதியில் உள்ள முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களுக்கு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்