இந்தியாவிற்கு பதக்கம் உறுதி..52 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் நிகழ்வு..அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக்-சிராக்

x

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி முன்னேறி உள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தோனேசியாசின் ஆஷன் - ஹெந்த்ரா ஜோடி உடன் சாத்விக் - சிராக் ஜோடி மோதியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக்-சிராக், 21க்கு 11, 21க்கு 12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் சுமார் 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு பதக்கம் உறுதியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்