எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

x

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல், விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழியாக அக்டோபர் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக, எம்பிபிஎஸ் படிப்பில் 8 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன.

பல் மருத்துவ படிப்பில் 2 ஆயிரத்த்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. மருத்துவ படிப்பு சேர்க்கையில், அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று முடிவடைந்த பிறகு, தமிழகத்தில் கலந்தாய்வு துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்