ஆண் நண்பருடன் நெருக்கம்!.. கண்டித்த கணவன் கழுத்தை அறுத்த மனைவி!.. புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்

x
  • மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும், சிக்கல் பகுதியை சேர்ந்த தாட்சாயிணி என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
  • கடந்த 5ம் தேதி, தாட்சாயணி, தனது ஆண் நண்பர் ராஜசேகருடன் சேர்ந்து, சரவணனை கட்டிப்போட்டு, கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
  • இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தாட்சாயிணி மற்றும் ராஜசேகரை போலீஸார் கைது செய்தனர்.
  • பின்னர் விசாரணையில், திருமணத்திற்கு முன்பே தாட்சாயிணிக்கும், ராஜசேகருக்கும் பழக்கம் இருந்ததும், பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் சரவணனுடன் திருமணம் நடந்ததும் தெரியவந்தது.
  • ராஜசேகருடன் தொடர்பில் இருந்ததை அறிந்த சரவணன், மனைவி தாட்சாயிணியை கண்டித்துள்ளார்.
  • இதில் ஆத்திரமடைந்த அவர், ராஜசேகருடன் சேர்ந்து கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
  • இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்