"கர்ப்பிணிகள் வீட்டிலேயே பிரசவம் பார்த்தால்.." - மயிலாடுதுறை ஆட்சியர் கடும் எச்சரிக்கை

x

கர்ப்பிணி பெண்களுக்கு வீடுகளிலேயே பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் எருக்கூர் கிராமத்தை ஜான் கிருஸ்டோபரின் மனைவி பெலுசியா, தனது கணவரின் உதவியோடு வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.

இதனையடுத்து பெலுசியா, அவரது கணவர், அவர்களுக்கு உதவிய தொண்டு நிறுவனர் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மருத்துவமனை அல்லது பிரசவம் பயிற்சி பெற்றவர்கள் உதவியின்றி பிரசவம் பார்ப்பது தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் எனவும், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்