ஊராட்சி தலைவரை பதவிநீக்கம் செய்த மயிலாடுதுறை கலெக்டர்

x

மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன்சத்திரம் கிராம ஊராட்சியில், அரசு விதிமுறைகளை மீறி செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டதாக புகார்கள் எழுந்தன. கடந்தாண்டு மார்ச் மாதம், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகளை, ஊராட்சி உதவி இயக்குநர் மேலாய்வு செய்தார். அதில் ஊராட்சி நிதி செலவினத்தில் விதிமீறல் நடைபெற்றிருப்பதால், குறைபாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிமன்றதலைவர் கனகராஜை, நிரந்தர பணிநீக்கம் செய்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்