உயிரை பிடித்துக்கொண்டு 60 அடி ஆழ இருட்டில் தவித்த சிறுவன் - 24 மணி நேர போராட்டம்... இறுதியில் நேர்ந்த சோகம்...

x

மத்தியப்பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் 24 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். விதிஷா மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் லோகேஷ், அங்குள்ள 60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அவரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினருடன், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். 24 மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்