மசூதி விவகாரம் - தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு | Tiruppur

x

வேலம்பாளையம், மகாலட்சுமி நகர் பகுதியில் அமைந்துள்ள மசூதி கடந்த 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. குடியிருப்பு பகுதியில் மசூதி கட்டப்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த நல சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் மசூதியை சீல் வைக்க உத்தரவிட்டு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்நிலையில், மசூதி தொடர்பாக முதல்வருக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, இந்து முன்னனியினர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்