மெரினாவில் பேனா நினைவு சின்னம்; பொதுமக்களிடம் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்

x

சென்னை மெரினாவில் அமைய உள்ள பேனா நினைவுச் சின்னம் குறித்து பொதுமக்களிடம் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படுகிறது.

இதன் அருகே கடலில், 134 அடி உயர பேனா நினைவு சின்னத்தை, 81 கோடி ரூபாயில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.

கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில், கேட் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக, கடல் மேல் நடந்து சென்று நினைவு சின்னத்தை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, மத்திய அரசின் முதல்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, அடுத்தக் கட்டமாக பொது மக்களிடம் கருத்துக் கேட்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என, மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்