மாரிதாஸ் மீதான வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் மாரிதாஸ் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

விசாரணை முடிவில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததது.

ஆனால் இந்த தள்ளுபடி உத்தரவு, மாரிதாஸ் மீது நிலுவையில் உள்ள பிற வழக்குகளை பாதிக்காது என்று உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்