கேரள முதலமைச்சர் தலைமையில் கிறிஸ்துமஸ் விருந்து- ஆளுநருக்கு அழைப்பு விடுக்காத கேரள அரசு

x

கேரளாவில் இன்று நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விருந்தில் பங்கேற்க, ஆளுருக்கு அழைப்பு விடுக்கவில்லை. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், திருவனந்தபுரத்தில் உள்ள சுற்றுலாத்துறைக்கு சொந்தமான மஸ்கட் விடுதியில் கிறிஸ்துமஸ் விருந்து நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க, எதிர்க்கட்சிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆளுநருக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை. கடந்த 14ஆம் தேதி ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் விருந்தை, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் நிராகரித்திருந்த‌து குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்