முகம் அழுகிய நிலையில் காட்டில் கிடந்த ஆண் சடலம் - போலீசார் அதிர்ச்சி

x

முகம் அழுகிய நிலையில் காட்டில் கிடந்த ஆண் சடலம் - போலீசார் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் ஏற்காடு வனப்பகுதியில், முகம் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்காடு காவல்நிலைய குடியிருப்பு கட்டுவதற்காக இடம் தேர்வு செய்ய காவல்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர், நில அலுவலர் உள்ளிட்டோர், ஏற்காடு டிப்ரவரி சாலையில் உள்ள ஒரு மலை உச்சிக்கு சென்றனர்.

அப்போது நிலம் அளக்க முற்பட்டபோது, அப்பகுதியில் முகம் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்து கிடந்த நபர், ஏற்காடு பட்டிப்பாடி நீடூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பிராஜா என்றும், மனைவியை பிரிந்த துயரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போல் சுற்றித் திரிந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், தம்பிராஜா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்