மணிப்பூர் வன்முறை - மத்திய அமைச்சர் கோரிக்கை

x

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வேண்டுகோள் விடுத்துள்ளார்...மணிப்பூரில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பதட்டத்தை குறைக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. சற்று இயல்பு நிலைமைக்கு திரும்பும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட, பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜீ கேட்டுக் கொண்டுள்ளார்

மேலும் வட கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மன்றத்தின் சார்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில் அமைப்பின் தலைவரான கிரண் ரிஜிஜீ, மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். வன்முறை நடவடிக்கைகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது எனவும் தெரிவித்துள்ள அவர், அனைவரும் வன்முறையை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மே 3ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் வெடித்த வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைத்துள்ளனர் மற்றும் ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கீரையாக்கின. மேலும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்