மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்.. வண்டலூர் பூங்காவில் வேரோடு சாய்ந்த மரங்கள்.. அமைச்சர் நேரில் ஆய்வு

x

மாண்டஸ் புயலால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பூங்காவின் மதில் சுவர்கள் இடிந்து விழுந்து கடுமையாக சேதம் அடைந்தன. சரிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு பாதிப்புகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ராமச்சந்திரன், விலங்குகள் அனைத்தும் முன் கூட்டியே கூண்டில் அடைக்கப்பட்டதால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சேதம் அடைந்த சுவர் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்