தொடர்மழையால் இடிந்துவிழுந்த சுவர் | பலியான தாய், உயிருக்கு போராடும் குழந்தை...

சென்னை சைதாப்பேட்டையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
x

வந்தவாசியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கேசவேல் சைதாப்பேட்டையில் உள்ள சைக்கிள் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 3 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், நேற்று இரவு பெய்த மழையால் இவரது வீட்டின் மீது, அருகில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து சுவர் விழுந்துள்ளது. இதில், மூன்று வயது குழந்தை கிருத்திகா, அவரது தாய் லட்சுமி, தந்தை கேசவேல் ஆகிய மூவருக்கு படுகாயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இவர்கள், அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருத்திகாவுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்