சபரிமலையில் மண்டல பூஜை - ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி முடிவு

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சன்னிதானத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பக்தர்களுக்கு தேவையான அறிவிப்புகளை பல்வேறு மொழிகளில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுவரை 24 பக்தர்கள் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளதால், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க, பக்தர்கள் தங்களது மருந்துகளை கொண்டு செல்வதற்கு உரிய அறிவிப்புகள் வெளியிடவும் முடிவெடுக்கப்பட்டது. இதே போன்று, அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக ஒரு வரிசை காலியாகவும் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்