காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்... அக்கா, தங்கை எடுத்த விபரீத முடிவு - மணப்பாறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x
  • திருச்சி அருகே, காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைமந்த 2 சகோதரிகள், கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டனர்
  • மணப்பாறை அருகே உள்ள அயன்புதுப்பட்டியைச் சேர்ந்த சகோதரிகளான வித்யா மற்றும் காயத்ரி, திருப்பூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
  • கோவில் திருவிழாவிற்காக கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர்.
  • சகோதரிகள் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த தாய் அகிலாண்டேஸ்வரி விசாரித்துள்ளார்.
  • அப்போது இருவரும், தங்களுடன் அதே நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்களை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
  • அதிர்ச்சி அடைந்த தாய், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளார்.
  • இதில் மனமுடைந்த சகோதரிகளான வித்யாவும், காயத்ரியும், வீட்டிற்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
  • இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்