அரிவாளை காட்டி போனை பறித்தவர்களை மரத்தில் கட்டிவைத்து தோலை உரித்த மக்கள்

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வழிப்பறியில் ஈடுபட்டு தப்ப முயன்ற நபரை விரட்டி பிடித்த மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த வினய் என்பவர், மானாமதுரை அருகே மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலை ஓரமாக டெம்போ வேனை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வினய்யிடம் அரிவாளை காட்டி மிரட்டி செல்போன் பறித்ததுடன், வேனை சேதப்படுத்திவிட்டு தப்பியோடினர். மேலும், செல்லும் வழியில் வாகுடியை சேர்ந்த ராம்குமார் என்பவரிடமும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த ராம்குமார் கிராம மக்கள் உதவியோடு, கொள்ளையர்களை விரட்டி சென்றார். இதில், கொள்ளையனான வேளாங்குலத்தை சேர்ந்த பிரேம்குமார் சிக்கிய நிலையில், ரவிக்குமார் தப்பியோடினார்.

இதையடுத்து, பிரேம் குமாருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்