சாதி சான்றிதழ் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நபர் - உடலை வாங்க மறுப்பு

x

சாதி சான்றிதழ் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நபர் - உடலை வாங்க மறுப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் வசித்து வந்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன், தனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்கப் பெறாததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால், கடந்த சில தினங்களுக்கு முன், உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்